Breaking News

மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் இரங்கல்: தெலுங்கு திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டரில் எஸ்பிபியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எஸ்பிபியின் மரணம் நாட்டின் கலைத்துறைக்கும், இசைத்துறைக்கும் பேரிழப்பாகும். மண்ணுலகில் பாடியது போதும் என விண்ணுலகத்தினர் அவரை அழைத்துக்கொண்டனரோ என்று தோன்றுகிறது.

எஸ்பிபியின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்கள், கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments