Breaking News

நடிகர்கள் ராஜ் கபூர், திலீப் குமார் வீடுகளை வாங்க பாக். முடிவு

இந்தி நடிகர்கள் ராஜ் கபூர், திலீப் குமார் ஆகிய இருவருமே பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பிறந்தவர்கள். சுதந்திரத்துக்குப் பின்னர் இருவருமே இந்தியாவிலேயே வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களின் மூதாதையர் வீடுகள் பெஷாவர் நகரில் உள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் தொல்பொருள் துறை தலைவர் டாக்டர் அப்துஸ் சமத் கூறியதாவது:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்திலுள்ள திலீப் குமார், ராஜ் கபூர் ஆகியோரின் வீடுகள் பாரம்பரியம் மிக்கவை. அந்த வீடுகளை அரசே வாங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ் கபூரின் வீடு பெஷாவர் நகரில் அமைந்துள்ளது. இது கபூர் ஹவேலி என அழைக்கப்படுகிறது. ராஜ் கபூர் வீடு 1918 முதல் 1922-ம் ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. இந்த வீட்டில்தான் ராஜ்கபூர் பிறந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments