Breaking News

ஒய் பிரிவு பாதுகாப்பு கோரிய நடிகை பாயல் கோஷ்: ஆளுநருடன் சந்திப்பு

இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நடிகை பாயல் கோஷ், தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி, மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார் நடிகை பாயல் கோஷ். இது பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனால், அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments