Breaking News

தேசத் துரோக வழக்கு: கங்கணா, ரங்கோலியிடம் ஜனவரி மாதம் விசாரணை

அடுத்த வருடம் ஜனவரி மாதம் மும்பை காவல்துறையின் முன் விசாரணைக்கு ஆஜராவதாக நடிகை கங்கணா ரணவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு எதிரான தேசத்துரோக வழக்கு நடவடிக்கையிலிருந்து மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் அளித்துள்ளது.

வாரிசு அரசியல், போதை மருந்து பழக்கம், மத ரீதியான பாரபட்சம் ஆகிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து நடிகை கங்கணாவும் அவரது சகோதரியும் பாலிவுட் துறையைச் சேர்ந்தவர்களைத் தவறாக சித்தரிப்பதாகவும், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்களிடையே பிரிவினையைத் தூண்டி, அவரவர் மதங்களை அவமதிப்பதாகவும் பாலிவுட்டைச் சேர்ந்த சையத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் பாலிவுட்டில் உடற்பயிற்சி நிபுணராகவும், நடிகர் தேர்வு இயக்குநராகவும் இருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments