Breaking News

திரையுலகில் நுழைந்து 10 ஆண்டுகள்- டொவினோ தாமஸ் நெகிழ்ச்சி

திரையுலகில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு டொவினோ தாமஸ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு வெளியான ‘பிரபுவின்டே மக்கள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் டொவினோ தாமஸ். அப்படத்தை தொடர்ந்து ‘ஏபிசிடி’, ‘7த் டே’, ‘மாயநதி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடித்த படம் ‘மின்னல் முரளி’படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்திய பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டு தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments