Breaking News

``அதிமுக-வை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள்” - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஒற்றைத் தலைமை சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும் என ஓ.பி.எஸ் பேசி வந்த நிலையில், வெளிப்படையாக எடப்பாடி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி பேசுவது போல் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், ``அதிமுக எனும் கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அதிமுக எந்த காலத்திலும் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அதிமுகவைப் பலவீனப்படுத்த நினைப்போர் முயற்சியை கட்சியின் சமூக வலைதள பிரிவினர் முறியடிக்க வேண்டும்” என்கிறார்.



from Latest News

No comments