Breaking News

சாய்னா நெவால் குறித்து சர்ச்சை ட்வீட்: நடிகர் சித்தார்த்துக்கு சைபர் க்ரைம் போலீஸார் சம்மன்

சென்னை: பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றபோது, விவசாயிகளின் போராட்டத்தால் அவர் மேம்பாலத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அவர் பாதியிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments