Breaking News

கோவை: எலியை கொல்ல விஷ மருந்துத் தடவிய கேரட்! - அறியாமல் சாப்பிட்ட கல்லூரி மாணவி மரணம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நெகமம் செட்டிக்காபாளையத்தைச் சேர்ந்த தம்பதி தேவசித்து – கிரேஷி அம்மாள். மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் எனிமா ஜாக்குலின் (19). கல்லூரியில் படித்து வருகிறார்.

எனிமா ஜாக்குலின்

Also Read: கோவை:`நகைகளை அடமானம்வைத்து தேர்தலைச் சந்திக்கிறேன்’ - பெயின்டிங் தொழிலாளியைக் களமிறக்கிய நாம் தமிழர்

இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் அம்மாவிடம் பசிக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் நூடுல்ஸ் சமைத்து சாப்பிடுமாறு சொல்லியுள்ளார்.

இதையடுத்து, தங்கள் மளிகைக் கடைக்கு சென்ற ஜாக்குலின் நூடுல்ஸ் பாக்கெட் மற்றும் சில கேரட்களை எடுத்து சமைத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு கேரட்டை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துள்ளார்.

கேரட்

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜாக்குலின் பரிதாபமாக உயிரிழந்தார். மளிகைக் கடையில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கேரட்டில் விஷ மருந்து தெளித்து வைத்துள்ளனர்.

எலி

இது தெரியாத ஜாக்குலின் கேரட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



from Latest News

No comments