Breaking News

‘எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே...’ - இசையோடு இரண்டற கலந்த மொழி பேதமில்லா கலைஞனின் சகாப்தம்

மொழி பேதமில்லா ஓர் இசைக் கலைஞனின் சகாப்தம் நிறைவடைந்துள்ளது. இசைக்கு ஏது மொழி என்பதை உணரவைத்த கலைஞன். எம்மொழியில் பாடினாலும் அம்மொழிக்கு சொந்தக்காரராவார். அதுவே எஸ்பிபி. தந்தை சாம்பமூர்த்தி ஆந்திராவில் ஹரிகதைகள் பாடும் கலைஞர். இவரே எஸ்பிபியின் குரு. சிறு வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டதால், தந்தையிடம் இசை கற்று வளர்ந்தார். 5-வது வயதில் ‘பக்த ராமதாஸ்’ என்ற நாடகத்தில் தந்தையுடன் இணைந்து நடித்தார் பாலசுப்ரமணியம். ஆந்திராவில் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் ரசிகர் வரை இவரது அன்பு பெயர் பாலுதான்.

நாடகத்தில் நடித்த பிறகு, இசை, நடிப்பு மீது பற்று அதிகரித்தது. ஆனால், தந்தை அறிவுறுத்தலின்படி, படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள தாய்மாமன் ஸ்ரீநிவாச ராவ் வீட்டில் தங்கி 5-வது வரையும், பிறகு, காளஹஸ்தியில் உள்ள போர்டு ஹைஸ்கூலில் 10-ம் வகுப்பு வரையும் படித்தார். அப்போது இவரது பள்ளி ஆசிரியர்களான ஜி.வி.சுப்ரமணியம், ராதாபதி ஆகியோர் அவரது இசை ஆர்வத்தைக் கண்டு, நாடகத்தில் வரும் பாடல்களை அவரை பாடச் செய்து, அதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து வழங்கி அவரை ஊக்கப்படுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments